52 ஆண்டுகளுக்கு நிரம்பிய குறிச்சி குளம்.. விவசாயிகள் டபுள் சந்தோஷம் : ஆட்சியர் ஆய்வு!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவில் அமைந்துள்ளது குறிச்சி குளம். 36 ஏக்கர் பரப்பளவில் இந்த குளம் அமைந்துள்ளது.
1972 ஆம் ஆண்டு பெய்த மழையின் காரணமாக குறிச்சி குளம் நிரம்பியது. அதன் பிறகு சரியான அளவு மழைப்பொழிவு இல்லாததால் குளம் நிரம்பாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு அதிக அளவில் இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி 118.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதன் காரணமாக ஊத்துக்குளி ஊராட்சிக்கு உட்பட்ட குறிச்சி குளம் தற்போது நிரம்பி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இன்று குறிச்சி குளத்தினை நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் படிக்க: மணீஷ் சிசோடியா அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த ஆதாரங்கள் இருக்கு.. ஜாமீன் வழக்கில் நீதிபதி ட்விஸ்ட்!
ஆய்வினைத் தொடர்ந்து தண்ணீரை முறையாக பயன்படுத்துவது மற்றும் சேமித்து வைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வில் ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.