கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி, அதிமுக எம்எல்ஏ ஜெயராம் ஆகியோருக்கு சொந்தமான ரூ.229 கோடி மதிப்பிலான உபரி நிலங்களை வருவாய் துறை அதிகாரிகள் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1957ல் கொண்டு வரப்பட்ட நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் குடும்பத்தில் உள்ள தனி நபர் ஒருவர் அதிகபட்சம் 15 ஏக்கர் வைத்துக் கொள்ளலாம். மேலும், ஒரு குடும்பத்தில் இரு வாரிசுகள், மனைவி மற்றும் கணவன் என்று இருந்தால், குடும்பத் தலைவரைத் தவிர்த்து மனைவிக்கு 5 ஏக்கர், மகனுக்கு 5 ஏக்கர், மகளுக்கு 5 ஏக்கர் என ஒரு குடும்பத்துக்கு மொத்தம் 30 ஏக்கர் மட்டுமே இருக்க வேண்டும். அதற்குமேல் இருந்தால் அவை உபரி நிலமாக கருதப்படும்.
இந்த நிலையில், கோவையில் ரூ.229 கோடி மதிப்பிலான உபரி நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல் சாலை, கொடிசியா அருகே 45.82 ஏக்கர் புஞ்சை நிலங்களை, உபரி நிலங்களாக தமிழ்நாடு நில சீர்திருத்தம் மற்றும் உச்ச வரம்பு சட்டத்தின்படி அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் கடந்த 7ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி, அந்த நிலங்களை மீட்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து, அதற்கான பணியில் கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ரூ.229 கோடி மதிப்பிலான இடங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு, அந்த இடத்தில் அறிவிப்பை பலகையும் நடப்பட்டுள்ளது. கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்பட 23 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும், சிங்காநல்லூர் அதிமுக எம்எல்ஏ ஜெயராம், 20 வீட்டு மனைகளை விற்பனை செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.