Categories: தமிழகம்

கேரளாவை போல குமரியிலும் படகு விபத்து ஏற்பட வாய்ப்பு… தமிழக அரசுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் பாஜக!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நேற்று படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு நாராயணன் திருப்பதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், நேற்று படகு கவிழ்ந்து இதுவரை 23 பேர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது.

போதிய உயிர் காக்கும் கவசங்கள் அணியாமல் சென்றதும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலானவர்களை படகில் ஏற்றி சென்றதுமே விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில், கன்னியாகுமரிக்கு சென்றிருந்தேன். விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகில் செல்ல நேர்ந்தது. அந்த படகில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் பயணிகள் இருந்ததும், பயணம் செய்தவர்களில் பலர் உயிர் காக்கும் கவசத்தை (காப்புச்சட்டை) அணியாமல் இருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது.

அதே போன்று விவேகானந்தர் பாறையில் அதன் முக்கியத்துவம் குறித்து பல இடங்களில் குறிப்பு உள்ளதோடு, சுற்றுலா பயணிகளுக்கு பல விவரங்களை எடுத்துரைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

மேலும், விவேகானந்தர் குறித்த ஏழு புத்தக நிலையங்களை அமைக்கப்பட்டு, பல நூல்கள் விற்பனையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், திருவள்ளுவர் சிலைக்கு சென்றிருந்த போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. பல ஆயிரக்கணக்கான பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வருகின்ற இடத்தில் திருவள்ளுவர் புகழை எடுத்து சொல்ல யாரும் இல்லை என்பது வேதனை.

அதே போல் திருக்குறளை, திருக்குறளின் பெருமையை பல்வேறு மொழிகளில் அங்கு வரும் பயணிகளுக்கு கொடுக்க வேண்டாமா? அவரின் கருத்துக்களை மக்களிடையே எடுத்து செல்ல எந்த வித எண்ணமோ, முயற்சியோ தமிழக அரசால் எடுக்கப்படவில்லை என்பது ஏமாற்றமே.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இதற்கு பொறுப்பு என்று சொல்லப்படுகிறது. ஆனால், அங்கே பணியாற்றுபவர்களின் அலட்சியம் முகம் சுளிக்க வைக்கிறது. அவர்களின் கடுமை அதிர்ச்சியளிக்கிறது.

உடன் தமிழக அரசு கன்னியாகுமரியில் கடலில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவனத்தில் கொள்ள வேண்டிய அதே நேரத்தில், பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ள இடத்தில் திருவள்ளுவரின் புகழை உலக மக்களுக்கு எடுத்து சொல்ல ஆவன செய்ய வேண்டும்.

சுற்றுலா வளர்ச்சி கழகத்திடமிருந்து நிர்வாகத்தை அகற்றி, கல்வி துறை அல்லது தமிழ் வளர்ச்சி துறையிடம் திருவள்ளுவர் சிலை நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும். வரும் முன் காப்போம்!பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு மற்றும் கடமை என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

16 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

16 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

16 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

17 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

17 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

18 hours ago

This website uses cookies.