கரூர் : கரூரில் மதுபான கடை விடுமுறை நாளன்று மது போதையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் மிலாடி நபியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அரசு மதுபான கடைகளுடன் அமைந்துள்ள சில மதுபானக்கூடங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. அங்கு மது மதுபானங்களை வாங்கி அருந்திய சிலர் போதையில் தள்ளாடி சென்றுள்ளனர்.
எல்.ஐ.சி அலுவலக வாசல் முன்பு சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகளப்பாக மாறி உள்ளது. இதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞரை, மற்றொரு இளைஞர் சரமாரியாக தாக்கியதில் அவர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்த அடையாளம் தெரியாத இளைஞரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரை தாக்கி விட்டு தப்பி சென்ற நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.