திருவள்ளூர் : பழவேற்காட்டில் முழு ஊரடங்கை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் விற்க பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை வருவாய் கோட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக இன்றுமுழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் சமூக விரோதிகள் சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவருவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அங்கு பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் செல்வம் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சிலர் வருவாய் கோட்டாட்சியரை கண்டதும் மதுபாட்டில்களை அப்படியே விட்டு விட்டு தப்பி சென்றனர். இதனையடுத்து மதுபானங்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர். மேலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் வருவாய் கோட்டாட்சியர் செல்வம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
This website uses cookies.