சிவகங்கை: மானாமதுரையில் லோடுமேன் வேலை பார்க்கும் ஒருவர் அதிமுக சார்பில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ளார்.
மானாமதுரை 14-வது வார்டு அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள பழனி என்பவர், இரவில் லோடுமேன் பணியையும் பகலில் தேர்தல் பணிகளையும் கவனித்து வருகிறார்.
இதன் மூலம் கட்சியில் கீழ்நிலை தொண்டனும் அடுத்தடுத்து உயரத்தை எட்ட முடியும் என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியம் என அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் தீயாய் வேலை செய்து வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிர ஈடுபட்டு வருகின்றனர்.
எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் புதுமுகங்களும், பாட்டாளி வர்க்கத்தினரும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் லோடுமேன் ஒருவர் அதிமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மானாமதுரை 14வது வார்டில் போட்டியிடும் பழனி என்பவர், இரவில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும் பகலில் ஒயிட் அண்ட் ஒயிட் கெட்டப்பில் மாஸ் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார்.
ஓட்டுக் கேட்பதற்காக மக்களை சந்திக்கச் செல்லும் இவர், தாம் ஒரு லோடுமேன் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்து உங்களுக்காக உழைக்க காத்திருப்பதாக உறுதியும் கொடுக்கிறார். பாரம் தூக்கும் தொழிலாளிக்கு கவுன்சிலர் சீட் கொடுக்கப்பட்டதன் மூலம் கட்சியில் யார் வேண்டுமானாலும் எந்த நிலைக்கும் உயரலாம் என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியம் என அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வருவதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். காலை 7 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் களப்பிரச்சாரத்திலும், இடைப்பட்ட நேரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையிலும் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.