Categories: தமிழகம்

கூட்டணிக்கு வேட்டு? திமுக அரசுக்கு எதிராக விசிக ஆர்ப்பாட்டம்.. கொந்தளித்த அறிவாலயம்!!

கூட்டணியில் சர்ச்சை? திமுக அரசுக்கு எதிராக விசிக ஆர்ப்பாட்டம்.. கொந்தளித்த அறிவாலயம்!!

நாயக்கனேரி பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கோரி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் விசிக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர், அமைச்சர் துரைமுருகனுக்கு பாடம் எடுக்கும் வகையில் பேசியிருப்பது கூட்டணியில் கலகத்தை உருவாக்கிடும் வகையில் அமைந்துள்ளது.

அதுமட்டுமல்ல திமுக ஆட்சி அமைந்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பங்களிப்பு அளப்பறியது எனவும் விசிக இல்லையென்றால் திமுக ஆட்சி அமைத்திருப்பது கஷ்டம் என்கிற வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டது. நாயக்கனேரி பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் இந்துமதிக்கு ஏன் இன்னும் பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லை என்றும் அது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு மற்றும் இடைக்கால தடை பற்றியும் 2 நாட்களுக்கு முன்னர் தான் அமைச்சர் துரைமுருகன் ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.

”தமிழக அரசே தமிழக அரசே.. காலம் தாழ்த்தாதே காலம் தாழ்த்தாதே..” என விசிகவினர் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பதோடு நாயக்கனேரி பட்டியலின ஊராட்சி மன்ற பெண் தலைவர் இந்துமதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க அமைச்சர் துரைமுருகன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தான் துரைமுருகன் வகிக்கும் பதவிக்கும் அவரது அரசியல் அனுபவத்திற்கும் அழகு எனவும் விசிக நிர்வாகி பாவலன் பாடமும் எடுத்தார்.

இது வேலூர், திருப்பத்தூர் மாவட்ட திமுகவினரை உரசும் வகையில் அமைந்துள்ளது. அதுமட்டுமல்ல விசிக மாநில நிர்வாகியின் பேச்சும், விசிக நடத்திய அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டமும் திருமாவளவனுக்கு தெரியாமல் நடந்திருக்காது எனக் கருதும் திமுக, திமுக மீதான திருமாவின் கோபத்துக்கு என்ன காரணம் என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வரும் சூழலில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பார்த்தால் பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில் உள்ளது.

நாயக்கனேரி பட்டியலின ஊராட்சி மன்ற பெண் தலைவர் இந்துமதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் விசிக ஆரம்பம் முதலே உறுதியாக நின்று வருவது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.