வேலூரில் முன்விரோதம் காரணமாக லாரி ஓட்டுனரை அரிவாளால் வெட்டிவிட்டு மூன்று பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் பண்ணை அருகே உள்ள மெக்கானிக் கடை ஒன்றில் தனது லாரியை பழுது பார்த்துக் கொண்டிருந்த அலமேலுமங்காபுரம் கொல்லை மேடு பகுதியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (33) என்பவரை, ஆட்டோவில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அந்த கும்பல் வெட்டியபோது, தற்காத்துக் கொள்ள முத்துகிருஷ்ணன் தனது கைகளால் தடுக்க முயன்றுள்ளார். இதனால் அவருக்கு கையில் பலமாக வெட்டு விழுந்துள்ளது. இதில், முத்துகிருஷ்ணனின் விரல்கள் துண்டாகியுள்ளது. தொடர்ந்து அந்த கும்பல் வெட்டியதில், தலையில் பலத்த வெட்டு விழுந்து முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார்.
மேலும் படிக்க: ஜெயக்குமார் கொலை வழக்கில் விசாரணை இழுபறி… வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு…!!!!
உடனே அங்கிருந்தவர்கள் சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முத்துகிருஷ்ணனை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அலமேலுமங்காபுரம் அடுத்த ஏரியூர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில், முன்விரோதம் காரணமாக இன்று முத்துகிருஷ்ணனை நோட்டமிட்டு அவரை சமயம் பார்த்து முன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வெட்டிவிட்டு தப்பித்து ஓடிய ஏரியூர் பகுதியை சேர்ந்த அசோக்(30), சக்திவேல் (30), சிவா (30) ஆகிய மூன்று பேர் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை சத்துவாச்சாரி காவல்துறையினர் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடு ரோட்டில் கும்பல் ஒன்று சரமாறியாக வெட்டிய சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.