Categories: தமிழகம்

ஆவின் நிர்வாகத்தால் ரூ.26 கோடி இழப்பு… அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை : கொந்தளித்த காங்., எம்எல்ஏ செல்வப்பெருந்தகை!!

விழுப்புரம் : ஆவின் நிர்வாகத்திற்கு வாங்கப்பட்ட உபகரணங்கள் சரியாக பயன்படுத்தாதால் அரசுக்கு 26 கோடியே 88 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதால் உபகரணங்களை சரியாக பயன்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்கள் வேல்முருகன் சிந்தனை செல்வன் உள்ளிட்டோர் விழுப்புரத்திலுள்ள ஆவின் நிறுவனம் கப்பூர் அரசு ஆதிதிராவிட விடுதி, அரசு மாதிரி மேல்நிலைபள்ளி உள்ளிட்ட ஆறு இடங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொதுகணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை, 2018 -19 ஆம் ஆண்டு 26 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் ஆவின் நிர்வாகத்திற்கு வாங்கப்பட்ட உபகரணங்கள் சரியாக பயன்படுத்தாதால் 26 கோடியே 88 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசிடம் இருந்து பெறப்பட வேண்டிய மான்யம் 11 கோடியே 52 லட்சம்  இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு  காரணமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த ஆட்சியில் சோலார் 1 கேவி வாங்க ஒரு லட்சம் தேவை படுகின்ற நிலையில் 3 லட்சம் கொடுத்து  வாங்கியுள்ளதால் 54 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு வழங்கிய நிதியை சரியாக பயன்படுத்தாமலும் தவறாகவும் கடந்த ஆட்சியில் பயன்படுத்தி உள்ளதாக கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் 25 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக தளவானூரில் கட்டப்பட்ட தடுப்பனை மூன்று மாதங்களிலேயே உடைந்ததால் தடுப்பனையை மறு சீரமைப்பு செய்ய  40 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு  பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் கப்பூரிலுள்ள ஆதிதிராவிட நலத்துறை விடுதி மோசமான நிலையில் உள்ளதால் துறை செயலர் ஜவகர் விடுதியை ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளதாக செல்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ச்சீ இப்படி ஒரு வைத்தியமா? காயத்திற்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை தானே குடித்த சூர்யா பட நடிகர்!

சூர்யா பட வில்லன் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த “சூரரைப் போற்று” திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர்…

2 hours ago

கழுத்தை நெறித்து 3 வயது குழந்தை கொலை.. விசாரணையில் சிக்கிய தாய் : கடைசியில் டுவிஸ்ட்!

திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு நாட்டார் ஸ்ரீதேவ் என்ற மகனும்…

3 hours ago

விடாது கருப்போட காப்பியா? சூர்யா நடிக்கும் படத்தின் டைட்டிலால் எழுந்த சந்தேகம்?

90ஸ் கிட்ஸை கதிகலங்கவைத்த தொடர் 1990களின் பிற்பகுதியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “விடாது கருப்பு” தொடரை 90ஸ் கிட்ஸால் மறந்திருக்க…

3 hours ago

பாகிஸ்தானுக்கு உதவாதீங்க; கம்முனு இருங்க- நெட்டிசன்களை பார்த்து எச்சரிக்கும் ராஜமௌலி

ஆபரேஷன் சிந்தூர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரின் கீழ் இந்திய இராணுவம் பாகிஸ்தான்…

5 hours ago

சினிமாவை விட்டு விலகமாட்டேன்.. கர்ப்பம் ஆனால் கூட… டாப் நடிகை!

சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, பிரபலமாகிவிட்டு திருமணத்திற்கு பிறகு…

5 hours ago

ராயல் சல்யூட்… பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து கூருகிறது. எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆந்திராவை சேர்ந்த ராணுவ…

6 hours ago

This website uses cookies.