சங்கரன்கோவில் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அத்திபட்டியைச் சேர்ந்தவர் சின்னமுனியசாமி. இவர் கோவில்பட்டியில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் கடந்த 4 மாதங்களாக அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று கவிதாவுக்கும், சின்ன முனியசாமி க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே கவிதா உடைமைகளை எடுத்துக்கொண்டு தனது தாய்வீட்டுக்கு சாத்தூருக்கு செல்வதாக கூறிப் புறப்பட்டார்.
கவிதா ஊருக்கு செல்லும் முன்பு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சின்ன முனியசாமி கவிதாவை ஹாலோபிளாக் கற்களால் சரமாரியாக கல்லால் அடித்து தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கணவன் சின்ன முனியசாமி குருவிகுளம் காவல் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து,
இச்சம்பவம் குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட கவிதாவின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.