சங்கரன்கோவில் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அத்திபட்டியைச் சேர்ந்தவர் சின்னமுனியசாமி. இவர் கோவில்பட்டியில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் கடந்த 4 மாதங்களாக அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று கவிதாவுக்கும், சின்ன முனியசாமி க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே கவிதா உடைமைகளை எடுத்துக்கொண்டு தனது தாய்வீட்டுக்கு சாத்தூருக்கு செல்வதாக கூறிப் புறப்பட்டார்.
கவிதா ஊருக்கு செல்லும் முன்பு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சின்ன முனியசாமி கவிதாவை ஹாலோபிளாக் கற்களால் சரமாரியாக கல்லால் அடித்து தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கணவன் சின்ன முனியசாமி குருவிகுளம் காவல் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து,
இச்சம்பவம் குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட கவிதாவின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.