மனைவியை கல்லால் அடித்துக் கொன்ற கொடூர கணவன்… குடும்பத்தகராறில் அம்மா விட்டுக்கு செல்ல முயன்றதால் வெறிச்செயல்..!!

Author: Babu Lakshmanan
28 January 2022, 6:09 pm
Quick Share

சங்கரன்கோவில் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அத்திபட்டியைச் சேர்ந்தவர் சின்னமுனியசாமி. இவர் கோவில்பட்டியில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் கடந்த 4 மாதங்களாக அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று கவிதாவுக்கும், சின்ன முனியசாமி க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே கவிதா உடைமைகளை எடுத்துக்கொண்டு தனது தாய்வீட்டுக்கு சாத்தூருக்கு செல்வதாக கூறிப் புறப்பட்டார்.

கவிதா ஊருக்கு செல்லும் முன்பு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சின்ன முனியசாமி கவிதாவை ஹாலோபிளாக் கற்களால் சரமாரியாக கல்லால் அடித்து தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கணவன் சின்ன முனியசாமி குருவிகுளம் காவல் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து,
இச்சம்பவம் குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட கவிதாவின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Views: - 1423

0

0