48 வார்டுகளைக் கொண்ட திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்வதற்காக மாநகராட்சி மூலம் நிரந்தர பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் பணியாற்றும் போது ஒவ்வொருவரின் ஊதியத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வந்துள்ளது.
பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அந்தப் பணத்தை தற்போது வரை மாநகராட்சி நிர்வாகம் வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், தற்பொழுது திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட்டு தற்பொழுது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் மூலம் 20 சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு இவர்களுக்கு இந்த பணிகளை தொடர்ந்து வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் ஆணையாளர் அறை முன்பாக தரையில் படுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயரிடம் நடந்த பேச்சுவார்த்தை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றி தராத பட்சத்தில் திண்டுக்கல் மாநகர் முழுவதும் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்கள் பணிக்கு செல்லாமல் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர்.
மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.