உசிலம்பட்டி அருகே பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சுரேஷ் டிம்பர்ஸ் எனும் பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமாக பர்னிச்சர் ஷோ ரூம், மர இழைப்பகம் மற்றும் ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஜவுளிக்கடை, பர்னிச்சர் ஷோரூம், மரக்கடை உள்ளிட்ட மூன்று இடங்களில் தனித்தனியாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து, மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த வருமான வரி சோதனையில் இந் நிறுவனம் வரி ஏற்பு ஏதும் செய்துள்ளனரா? கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட வாய்ப்பு உள்ளதா என்ற தகவல்கள் சோதனை முடிவில் தெரிய வரும் என தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து எழுமலையில் பிரபலமான தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.