மொய்.. சீர்வரிசை எல்லாம் பழைய ஸ்டெயிலு… மணமகனை வித்தியாசமாக வரவேற்ற பெண்ணின் தாய்மாமன் ; திருமண விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்!!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இருக்கக்கூடிய விக்கிரமங்கலம் பகுதியில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் மணமகன் யுவா மற்றும் மணமகள் சிவமீனா ஆகியோரது திருமணம் பெரியோர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக, தென் தமிழகத்தில் திருமண வைபவங்கள், காதுகுத்து போன்ற விசேஷங்கள் என்றால் தாய்மாமனின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

செய்யும் சீர்வரிசையிலிருந்து உறவினர்களோடு வந்திருந்து அங்கு அவர்கள் செய்யும் அலப்பறை தனி தான். அந்த வகையில், சற்று வித்தியாசமாக தனது மருமகனுக்கு செய்ய வேண்டும் என்று யோசித்த மதுரை செக்கானூரணி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர், தனது நண்பரும், பிரபல பின்னணி பாடகருமான மதுரை போத்தி ராஜாவுடன் இணைந்து, ‘மணமகன் வாராரு’ …என்கின்ற இசை ஆல்பத்தை தயாரித்து இல்லற வாழ்வில் அடி எடுத்து வைக்கும் தனது மருமகனுக்கு பரிசாக வழங்கினார்.

பொதுவாக திருமணம் என்றால் ஆயிரத்திலிருந்து லட்சக்கணக்கில் மொய் எழுதுவது, தங்க மோதிரம், செயின்… இவ்வாறு பரிசாக வழங்குவது, மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மிகவும் வழக்கமான ஒன்றாக இருக்கக்கூடிய வேளையில், மொய் எழுதுவதையே கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பதாக மொய்டெக் எனும் கணினி மயமாக்கி மதுரை மற்றும் பிற பகுதிகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் உறவினர்கள் எழுதும் மொய் பணத்தை கணினி மூலம் வரவு செய்து அதற்கு ரசீதும் வழங்கி வருகின்றனர்.

இந்த சூழலில், தாய்மாமன் வாரானடி என்கின்ற பாடலை, ஏற்கனவே வெளியீடு செய்து மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பிரபலமாகிய நிலையில், தற்போது தனது மருமகனின் திருமணத்தை முன்னிட்டு மீண்டும் ஒரு இசை ஆல்பத்தை தயாரித்து மருமகனுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

திருமண மண்டபத்தில் அந்த பாடலை பாடிய மதுரை போத்திரராஜா மற்றும் பிரபு ஆகியோர் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரது கையால் வெளியிடக் கூடிய வகையில் அவர்களது புகைப்படங்களுடன் கூடிய ஒரு பிரேமை மணமேடையில் வழங்கினர். உற்றார், உறவினர்கள் புடை சூழ ஆனந்தமாக அந்த பாடலை திருமண மண்டபத்தில் இருந்த ஒலிபெருக்கியில் ஒலிக்கச் செய்தனர்.

மணமகன், மணமகள் ஆனந்தமாக தங்களது நண்பர்களுடன் ஆட்டம் ஆடியது காண்போரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. சமீப காலமாக மணமேடைக்கு வரக்கூடிய மணமகள் தோழிகளுடன் ஆடியபடி வரக்கூடிய நிகழ்வு ட்ரெண்டாகி வரக்கூடிய வேளையில், மணமகனுக்கு பரிசாக வழங்கப்பட்ட பாடலுக்கு மணமகளும் இணைந்து ஆடியது திருமண வீட்டிற்கு வந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பொதுவாக மதுரைக்காரர்கள் என்றால் சற்று வித்தியாசம் தான்…. சாப்பிடுவதிலும் சரி … போஸ்டர் அடிப்பதிலும் சரி … மொய் எழுதுவதிலும் சரி .. இந்த வகையில் அடுத்த கட்டமாக தற்போது பாடல் வெளியீடு செய்திருப்பது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

3 weeks ago

This website uses cookies.