திண்டுக்கல் ; மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் ஆவியூர் விளக்கு அருகே கார் டயர் வெடித்து விபத்து அரசு போக்குவரத்து ஊழியர் மற்றும் அவரது தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியைச் சார்ந்தவர் ஆனந்த். இவர், திண்டுக்கல் மாவட்ட அரசு போக்குவரத்து பணிமலையில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனது குடும்பத்துடன் திருச்செந்தூரில் சாமி கும்பிட்டு விட்டு சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு காரில் திரும்பி உள்ளார்.
விருதுநகர் அருகே உள்ள ஆவியூர் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக, காரின் டயர் வெடித்து அருகே இருந்த பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. இதில், கார் ஓட்டி வந்த ஆனந்த் மற்றும் அவரது தாய் மீனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும், காரில் வந்த ஆனந்தின் உறவினர்கள் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு நபர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், நான்கு நபர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஆவியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.