ரவீந்தர் சந்திரசேகரனை மணந்த மகாலட்சுமி நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறார் மகாலட்சுமி என தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனும், டிவி சீரியல்களில் நடித்து வரும் மகாலட்சுமியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு முன்பே குழந்தை தொடர்பாக நிபந்தனை விதித்தார் மகாலட்சுமி.
முதல் திருமணம் மூலம் மகாலட்சுமிக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் ஒரு குழந்தை பெற ஆசையாக இருப்பதாக ரவீந்தரிடம் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறாராம் மகாலட்சுமி. குழந்தை பிறந்த பிறகு சீரியல்களில் நடிக்காமல் தயாரிக்கும் ஐடியாவில் இருக்கிறாராம்.
ரவீந்தர் சந்திரசேகரன் படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் ரவீந்தரை போன்று தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவிருக்கிறாராம் மகாலட்சுமி. ரவீந்தர் ஒரு தயாரிப்பாளராக இருப்பது தான் எனக்கு பெரிய பிரச்சனையே. அவரின் தொழிலால் தான் நான் அவரின் பணத்துக்காக ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக விமர்சிக்கிறார்கள் என்றார்.
திருமணம் முடிந்த நாளில் இருந்து சமூக வலைதளங்களில் மகாலட்சுமி, ரவீந்தர் சந்திரசேகரன் பற்றி தான் பேச்சாக உள்ளது. மேலும் ரவீந்தரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. ரவீந்தர் போஸ்ட் போட அதற்கு மகாலட்சுமி கமெண்ட் போட, ரசிகர்கள் பதிலுக்கு கமெண்ட் அடிக்கவுமாக இருக்கிறார்கள்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.