மின்கம்பி அறுந்து விழுந்து தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மின்வாரியத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
வடகடும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டன். இவருக்கு 10 வயதில் ஹேமநாதன் எனும் மகன் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனை கவனிக்காமல் சென்ற இருவர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் கேட்டு அங்கு திரண்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனிடையே, கடந்த ஓராண்டாக அந்த மின்கம்பி பழுதாகி தாழ்வாக சென்று கொண்டிருந்ததாகவும், பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காததே இரு உயிர்கள் பறிபோனதுக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.