கோவை: 8 வயது சிறுமியிடம் ஆபாச படங்களை காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினம்(47). இவர் அப்பகுதியில் உள்ள நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்துள்ளார்.
இந்நிலையில் குத்தகைக்கு அளித்த உரிமையாளரின் 8 வயது மகள் நிலத்தில் விளையாட செல்லும் போது ஆபாச படங்களை காண்பித்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அடிக்கடி சிறுமிக்கு பாலியல் சீண்டல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி சிறுமி படிக்கும் பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் சிறுமி தனக்கு ஏற்பட்டுள்ள உடல் உபாதைகள் குறித்து மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்த போது பொழுது சிறுமி பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து மருத்துவர்கள் சிறுமியின் உறவினர்களுக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரத்தினத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.