Categories: தமிழகம்

ஒரே நாளில் ஏடிஎம்களில் அடுத்தடுத்து பேட்டரிகள் திருட்டு : குற்றவாளியின் வாக்கு மூலத்தால் ஆடிப்போன போலீஸ்

கோவை : கோவையில் ஒரே நாளில் ஏடிஎம்களில் அடுத்தடுத்து பேட்டரிகள் திருடுபோன வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஏடிஎம்களில் தொடர்ந்து பேட்டரிகள் திருடு போக கூடிய சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் போலீசார் விசாரணை நடத்தி திருடர்களை பிடிக்க தீவிரம் காட்டியுள்ளனர்.இந்நிலையில் வெரைட்டிஹால் பகுதி ஏடி.எம்.ஒன்றில் பேட்டரிகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து வெரைட்டி ஹால் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சிங்காநல்லூர் பகுதியிலும் பேட்டரி காணாமல் போனது தெரிய வந்தது.ஒரே நாளில் அடுத்தடுத்து பேட்டரிகள் திருடுபோன சம்பவத்தால் போலீசார் ஏடிஎம்களில் முகாமிட்டனர்.

இந்த நிலையில் சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான போலீசார் பேட்டரி காணாமல்போன வங்கி அதிகாரிகள் தந்த புகாரின் அடிப்படையில் புலனாய்வு செய்த நிலையில் செந்தில் குமார் என்ற நபரை கைது செய்தனர். செந்தில் குமாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போலீசார் அதிர்ந்து போகும் அளவிற்கு வாக்குமூலம் தந்திருக்கிறார். பேட்டரி திருடுவதற்கு சாதாரணமாக சென்றால் போலீசாரிடம் மாட்டிவிடுவோமென நினைத்து பேட்டரி மெக்கானிக் போன்று ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பட்டப்பகலிலேயே பேட்டரிகளை திருடி இருக்கின்றார்.

பேட்டரிகளை கழட்டும்போது வாடிக்கையாளர்கள் கேட்டால் நான் மெக்கானிக் என்றும் பேட்டரியை சரிசெய்ய வந்து இருப்பதாகவும் தெரிவித்து லாவகமாக பேட்டரியை திருடி பழைய இரும்பு கடையில் விற்று வந்திருக்கிறார். இரவு நேரங்களில் பேட்டரி திருடுவதற்கு ஏடிஎம்களுக்கு சென்றால் போலீஸ் வந்து விடுவோமென்று எண்ணி பேட்டரி திருடும் திருட்டு சம்பவத்தை பட்டப்பகலிலேயே துணிகரமாக நிகழ்த்திய செந்தில்குமார் கோவை ஏடிஎம்களில் பேட்டரிகளை கொள்ளையடித்து இருக்கிறார்.

திருடர்களை பிடிக்க இரவில் போலீசார் ரோந்து செல்கின்ற நிலையில் பட்டப்பகலில் மெக்கானிக் போர்வையில் ஏடிஎம்களில் திருடினால் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்கின்ற யுக்தியின கையாண்ட செந்தில் பேட்டரிகளை மட்டுமே குறிவைத்து அதுவும் பட்டப்பகலிலேயே திருடுவது வாடிக்கையான செயலாக கடைபிடித்து வந்ததும் தெரிய வந்தது.பேட்டரிகளை மட்டுமே திருடி போலீசாரிடம் அகப்படாமல் இருக்க செந்தில்குமார் வகுத்த செயல்திட்டம் போலீசையே அதிர செய்திருக்கின்றன. இந்நிலையில், செந்தில்குமாரை சிங்காநல்லூர் போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.

KavinKumar

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

1 hour ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

2 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

2 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

2 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

4 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

4 hours ago

This website uses cookies.