கன்னியாகுமரி : நித்திரவிளை அருகே குடும்ப தகராறில் தம்பியை எரித்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பள்ளிக்கல் பகுதியை சேர்ந்தவர் ரெஜி என்ற டென்னீஸ் (54). இவரது தம்பி பிரைட்(45). இருவருக்கும் திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரது மனைவிகளும் இவர்களை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இதனால் அண்ணன் – தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு வீட்டின் முன் நின்ற 3 தென்னை மரங்களை பிரைட் விற்று விட்டாராம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ஒரு மரத்தை விற்க பிரைட் முயற்சித்தாராம். இதனால் அண்ணன் – தம்பிக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் மாறிமாறி தாக்கி கொண்டனர். இதில் தம்பி பிரைட் மயங்கி வீட்டுக்குள் விழுந்தார். அப்போது, டென்னீஸ் அவரை வீட்டின் வெளியே இழுத்து போட்டு ஸ்டவ்வில் இருந்த மண்ணெண்ணையை பிரைட் மீது ஊற்றி தீ வைத்தார்.
தீயில் கருகிய அவரை யாரும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை. இதனால் பிரைட் இன்று காலை பரிதாபமாக இறந்து விட்டார். தகவலறிந்த நித்திரவிளை போலீசார் விரைந்து சென்று பிரைட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரைட்டின் அண்ணன் டென்னீசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.