கன்னியாகுமரி : நித்திரவிளை அருகே குடும்ப தகராறில் தம்பியை எரித்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பள்ளிக்கல் பகுதியை சேர்ந்தவர் ரெஜி என்ற டென்னீஸ் (54). இவரது தம்பி பிரைட்(45). இருவருக்கும் திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரது மனைவிகளும் இவர்களை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இதனால் அண்ணன் – தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு வீட்டின் முன் நின்ற 3 தென்னை மரங்களை பிரைட் விற்று விட்டாராம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ஒரு மரத்தை விற்க பிரைட் முயற்சித்தாராம். இதனால் அண்ணன் – தம்பிக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் மாறிமாறி தாக்கி கொண்டனர். இதில் தம்பி பிரைட் மயங்கி வீட்டுக்குள் விழுந்தார். அப்போது, டென்னீஸ் அவரை வீட்டின் வெளியே இழுத்து போட்டு ஸ்டவ்வில் இருந்த மண்ணெண்ணையை பிரைட் மீது ஊற்றி தீ வைத்தார்.
தீயில் கருகிய அவரை யாரும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை. இதனால் பிரைட் இன்று காலை பரிதாபமாக இறந்து விட்டார். தகவலறிந்த நித்திரவிளை போலீசார் விரைந்து சென்று பிரைட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரைட்டின் அண்ணன் டென்னீசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.