அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தனியார் ஸ்ரீராம் இன்சுரன்ஸ் நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த அன்னதாசன் நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராபர்ட். இவர் காக்களூர் பகுதியில் உள்ள (ஸ்ரீராம்)தனியார் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதே காம்ளக்சில் இந்தியா பில்டிங் ஹோம் லோன் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் சரண்யா (26) (பெயர் மாற்றம்) என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார்.
மேலும் படிக்க: 10 ஆண்டுகள் ஆயிடுச்சுல.. பாஜகவுக்கு இறுமாப்பு வரத்தான் செய்யும் ; முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்
இவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணி முடிந்து லிப்டில் வரும்போது சரண்யாவை ஆடிட்டர் ராபர்ட் வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரண்யா திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராபர்ட் (46) மீது புகார் அளித்ததையடுத்து. விசாரணக்கு ஆஜரான நிலையில், மீண்டும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து ராபர்ட் வந்தார்.
மேலும் படிக்க: அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு… நள்ளிரவில் நடந்த சம்பவம் ; திமுகவினர் பரபரப்பு புகார்…!!!
அப்போது அங்கு ராபர்ட்டை காவல் நிலைய வாசலில் வைத்து சரண்யாவின் சகோதரர் மௌலி என்பவர் தலை கழுத்து ஆகிய இடங்களில் 3 முறை பலமாக தாக்கியுள்ளார். ஏற்கனவே ராபர்ட்டுக்கு முதுகுத்தண்டில் பிரச்சனை ஏற்பட்டு ஆபரேஷன் செய்த நிலையில், சரண்யாவின் தம்பி மௌலி தாக்கியதில் அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலிலேயே சுருண்டு விழுந்த ராபர்ட் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயரிழந்தார்.
காவல் நிலைய வாசலில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து சரண்யாவின் தம்பி மௌலி(23)யை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.