கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் தமிழக இந்து சமய அறநிலயத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவை சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்து அம்மனை தரிசித்து செல்வதால் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோயிலில் வருடா வருடம் மாசி பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10-நாட்கள் நடைபெறுவது வழக்கம்
இந்த திருவிழாவின் போது ஹைந்தவ ஹிந்து சேவா சங்கம் சார்பில் 10-நாட்கள் சமய மாநாடு நடைபெறுவது வழக்கம்.
இந்த வருட மாசி திருவிழா மார்ச் மாதம் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் திருவிழாவின் போது நடத்தப்படும் சமய மாநாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்தது.
இந்த நிலையில் 86-வருட பாரம்பரிய நிகழ்வான சமய மாநாட்டிற்கு தடை விதித்த இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பாக மறியல் ஆர்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இன்று இந்து முன்னணி சார்பில் மண்டைக்காடு கோயில் முன் ஆர்பாட்டம் மற்று மறியல் போராட்டம் நடத்த பல்வேறு அமைப்புகளூக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டைக்காடு கோயில் வளாகத்தை சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் இருந்து போராட்டத்திற்கு வருபவர்களை தடுத்து நிறுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரிகாடு அமைத்து குமரி, நெல்லை, தூத்துக்குடி தென்காசி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இவர்கள் அந்த வழியாக வரும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பின் அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட இருந்த போராட்டங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையிலும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் கோயில் சுற்று வட்டார பகுதிகள் பரபரப்பாகவே காணப்படுகிறது.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.