திருவாரூர் : மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் செயல் அலுவலர் சங்கீதா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜகோபால சாமி கோவில் செயல் அலுவலராக பணிபுரிந்து வந்தவர் சங்கீதா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கோவிலில் செயல் அலுவலராக சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில் செயல் அலுவலர் சங்கீதா நிர்வாக ரீதியாக சில முறைகேடுகளில் ஈடுபடுவதாக இந்து சமய அறநிலையத்துறை உயரதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.புகார் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆரம்ப கட்ட முகாந்திரங்கள் இருந்ததால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாகை மண்டல இணை ஆணையர் தென்னரசு தனது உயரதிகாரிகளுக்கு பரிந்துரைத்தார்.
இதையடுத்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் செயல் அலுவலர் சங்கீதாவை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். புதிய செயல் அலுவலராக கவியரசன் பணியாற்றுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராஜகோபால சுவாமி ஆலயத்தில் பெண் செயல் அலுவலர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செயல் அலுவலர் சங்கீதா மீதான புகார்கள் குறித்து துறை ரீதியான தொடர் விசாரணை நடைபெறும் என்றும், அதன் முடிவில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவர் மீது உயர் அதிகாரிகளின் வழிகாட்டலின் பேரில் சட்டரீதியாக க
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.