அதிமுக கூட்டணி கட்சியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் அந்தந்த கட்சியினர், தற்பொழுது சூறாவளி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பேருந்து நிலையம் அருகே வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் பொதுமக்களிடையே பல்வேறு பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார்.
மேலும் படிக்க: CM ஸ்டாலினுக்கு தோல்வி பயம்… செங்கல்லை தூக்கி திரியும் உதயநிதி முடித்த கட்டங்களை திறக்கலாமே? இபிஎஸ் விமர்சனம்!
இதனையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த நெல்லை முபாரக் அலிக்கு இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் நான் ஆதரவு தருகிறேன். பிஜேபி தேர்தல் அறிக்கையில் ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவித்துள்ளது குறித்து ஒரே மாடு ஒரே கோமியம் என நகைச்சுவையாக பதில் அளித்தார்.
தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டாம். தமிழக அரசு மருத்துவமனையே போதும். ஏனென்றால் இங்கு உள்ள மக்களை அதிகமாக குடிக்க வைத்து, பின்னர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை இங்கே ஆக்கிரமிப்பு செய்ய வைத்துக் கொள்வார் இந்த மத்திய அரசும், மோடி அரசும்.
மேலும் படிக்க: இது கூடத் தெரியாமல் ஸ்டாலின் CMஆக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு : கேரண்டி தயார்.. விடியல் எங்கே? அண்ணாமலை!!!!
தமிழகத்திற்கு தொடர்ந்து வரும் மோடியை பார்த்து நான் கேட்கிறேன், தமிழகத்தில் ஆரம்பிக்கும் விமான நிலையம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற தொழில் நிறுவனத்திற்கு தமிழர்களுக்கு மட்டும் வேலை தர முடியுமா…? அப்படி என்றால் வட மாநிலத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் தற்போது தமிழர்கள் தான் வேலை தருகிறார்கள், முதலில் அதனை சரி செய்யும்படி கூறினார்,
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.