கோவை : கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வானுவம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்வர்தன். இவரது மகள் நந்தினி (வயது 22). கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மாணவியாக நான்காம் ஆண்டு பயின்று வருகிறார்.
கல்லூரியின் விடுதியில் தங்கி பயின்று வரும் நந்தினி இன்று காலை 11.30 மணியளவில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “அறுவைசிகிச்சை செய்யும் கத்தியை பயன்படுத்திக் கொண்டு மணிகட்டு நரம்புகளை அறுத்த பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவியின் மரணம் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விமானம் மூலம் மாணவியின் பெற்றோர்கள் கோவை வருகின்றனர்.
அவர்கள் வந்த பிறகு மாணவியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது” என்றனர்.
தற்கொலைக்கான முழு காரணம் இன்னும் தெரியவில்லை என்ற சூழலில் போலீசார் இது குறித்து விசாரணை நடத்துகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.