மேட்டுப்பாளையம் அருகே உயிருக்கு போராடும் பெண் காட்டு யானைக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரத்தில் முருகன் என்பவரின் விவசாய தோட்டத்தில் பெண் காட்டு யானை ஒன்று படுத்த நிலையில் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில், அரசு வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார், சிறுமுகை உதவி கால்நடை மருத்துவர் தியாகராஜன், வனச்சரக அலுவலர் மனோஜ் மற்றும் வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த பொழுது, யானை எழுந்து நிற்க முடியாமல் படுத்திருப்பது தெரியவந்தது.
உடனே மருத்துவ குழுவினர் படுத்திருக்கும் பெண் யானைக்கு ஊட்டச்சத்து மருந்து மாத்திரைகளை அளித்தனர். மேலும், ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் படுத்து இருக்கும் பெண் யானையை எழுந்து நிற்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் யானையால் சுயமாக நிற்க முடியவில்லை. இதனையடுத்து, மருத்துவ குழுவினர் யானைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.