திருச்சி: பாரத பிரதமரின் அம்ரித் மகோத்சவ் நினைவு பரிசு ராணுவ அதிகாரிகள் மேஜர் சரவணன் குடும்பத்தினரிடம் வழங்கினர்.
இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினம் அம்ரித் மகோத்சவ் பெயரில் நாடு முழுவதும்
75 இடங்களில் 75வாரங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நமது நாட்டின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்காக நடைபெற்ற போர்களில் இன்னுயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு பாரத பிரதமரின் நினைவு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் நாட்டிற்காக தன்னுயிர் நீத்த முதல் ராணுவ அதிகாரியான திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணனுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று மாலை திருச்சி பெட்டாலியன் என்சிசி 2 கமாண்டிங் ஆபீஸர் ராம்நேக் கௌசாமி மற்றும் திருச்சி ஜோசப் கல்லூரி அசோசியேட் என்சிசி ஆபிஸர் அர்ம்ஸ்டராங் ஆகியோர் பாரத பிரதமரின் நினைவு பரிசை மேஜர் சரவணனின் சகோதரியான டாக்டர் சித்ரா செந்தில்குமாரிடம் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து மேஜர் சரவணன் திருவுருவப் படத்திற்கு புனித வளனார் கல்லூரியில் தேசிய மாணவர் படை மாணவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
This website uses cookies.