திருவள்ளூரில் அரசு உதவி பெறும் பள்ளியின் மாணவர்கள் மினி வேனின் பின்பக்கத்தில் ஏறி தொங்கியபடி ஆபத்தான நிலையில் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் நேதாஜி சாலை துவங்கி சத்தியமூர்த்தி தெரு வடக்கு ராஜ வீதி வழியாக அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் அவ்வழியாகச் சென்ற மினி வேனில் பின்பக்கம் ஏறி தொங்கியபடி, சாகசம் செய்தவாறு தங்களது பள்ளிக்குச் சென்றனர். போக்குவரத்து நெரிசல் மிக்க அந்தப் பகுதி என்பதால், மினி வேன் மெதுவாகச் சென்றது.
தொங்கியபடி சென்ற மாணவர்களின் இந்த செயலை கண்டு மற்ற வாகன ஓட்டிகள் மனம் பதைபதைத்தனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மாணவர்கள் படியில் பயணிப்பதை காவல்துறையினர் எச்சரித்து தடுத்து வரும் சூழலில், மூன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எதையும் பொருட்படுத்தாமல், மினி வேனில் ஆபத்தான முறையில் தொங்கியவாறு, பயணித்து பள்ளி கூட வாசல் வரை சென்று இறங்கியது பார்ப்பவர்களையும் பதைபதைக்க செய்தது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.