திருவள்ளூரில் அரசு உதவி பெறும் பள்ளியின் மாணவர்கள் மினி வேனின் பின்பக்கத்தில் ஏறி தொங்கியபடி ஆபத்தான நிலையில் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் நேதாஜி சாலை துவங்கி சத்தியமூர்த்தி தெரு வடக்கு ராஜ வீதி வழியாக அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் அவ்வழியாகச் சென்ற மினி வேனில் பின்பக்கம் ஏறி தொங்கியபடி, சாகசம் செய்தவாறு தங்களது பள்ளிக்குச் சென்றனர். போக்குவரத்து நெரிசல் மிக்க அந்தப் பகுதி என்பதால், மினி வேன் மெதுவாகச் சென்றது.
தொங்கியபடி சென்ற மாணவர்களின் இந்த செயலை கண்டு மற்ற வாகன ஓட்டிகள் மனம் பதைபதைத்தனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மாணவர்கள் படியில் பயணிப்பதை காவல்துறையினர் எச்சரித்து தடுத்து வரும் சூழலில், மூன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எதையும் பொருட்படுத்தாமல், மினி வேனில் ஆபத்தான முறையில் தொங்கியவாறு, பயணித்து பள்ளி கூட வாசல் வரை சென்று இறங்கியது பார்ப்பவர்களையும் பதைபதைக்க செய்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.