மினிவேனின் பின்பக்கத்தில் தொங்கியபடி சென்று சாகசம்… பள்ளி மாணவர்களின் ஆபத்தான பயணம்…!!

Author: Babu Lakshmanan
15 July 2022, 2:12 pm
Quick Share

திருவள்ளூரில் அரசு உதவி பெறும் பள்ளியின் மாணவர்கள் மினி வேனின் பின்பக்கத்தில் ஏறி தொங்கியபடி ஆபத்தான நிலையில் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் நேதாஜி சாலை துவங்கி சத்தியமூர்த்தி தெரு வடக்கு ராஜ வீதி வழியாக அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் அவ்வழியாகச் சென்ற மினி வேனில் பின்பக்கம் ஏறி தொங்கியபடி, சாகசம் செய்தவாறு தங்களது பள்ளிக்குச் சென்றனர். போக்குவரத்து நெரிசல் மிக்க அந்தப் பகுதி என்பதால், மினி வேன் மெதுவாகச் சென்றது.

தொங்கியபடி சென்ற மாணவர்களின் இந்த செயலை கண்டு மற்ற வாகன ஓட்டிகள் மனம் பதைபதைத்தனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மாணவர்கள் படியில் பயணிப்பதை காவல்துறையினர் எச்சரித்து தடுத்து வரும் சூழலில், மூன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எதையும் பொருட்படுத்தாமல், மினி வேனில் ஆபத்தான முறையில் தொங்கியவாறு, பயணித்து பள்ளி கூட வாசல் வரை சென்று இறங்கியது பார்ப்பவர்களையும் பதைபதைக்க செய்தது.

Views: - 401

0

0