Categories: தமிழகம்

சர்வர் பிரச்சனையை காட்டி வேலைவாய்ப்பை வழங்காமல் இருக்கக்கூடாது: அமைச்சர் அறிவுறுத்தல்..!

சர்வர் பிரச்சனையை காரணம்காட்டி 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வேலை வழங்காமல் இருக்க கூடாது என்றும் சர்வர் வேலை செய்யாவிட்டாலும் பணிக்கு வரும் அனைவருக்கும் நாள்தோறும் பணி வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆலங்குடி அருகே மாங்காட்டில் நடைபெற்ற அண்ணா மறுமலர்ச்சி திட்ட தொடக்க விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குளமங்கலம் தெற்கு மற்றும் மாங்காடு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது.

இதில் அந்த ஊராட்சிகளில் பேபர் பிளாக் சாலை மற்றும் சிமெண்ட்சாலை,ஊரணி தூர்வாருதல் மற்றும் பள்ளிக்கூடத்திற்கு தேவையான கழிப்பறை அல்லது மிதிவண்டி பாதுகாப்பு நிலையம் அமைப்பதற்காக குலமங்கலம் தெற்கு ஊராட்சிக்கு ரூபாய் 50 லட்சமும் மாங்காடு ஊராட்சிக்கு ரூபாய் 63 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்நாதன் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

சர்வர் பிரச்சனையை காரணம் காட்டி 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை திரும்ப அனுப்பக்கூடாது என்றும் சர்வர் வேலை செய்யாவிட்டாலும் பணிக்கு வந்த பணியாளர்களுக்கு வேலை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதனை ஒன்றிய அலுவலர்கள் கண்காணித்து பணிக்கு வந்த அனைவருக்கும் வருகை பதிவேடு பதிவு செய்து சம்பளம் வாழங்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், கஜா புயலால் விடுதலை இழந்த மக்களுக்கு ஏற்கனவே திமுக அரசு செயல்படுத்திய கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட உள்ளதாகவும், வீடுகள் இல்லாத பயனாளிகள் இதில் வீடுகளை பெற்று பயன்பட வேண்டும் எனவும் கூறினார்.

Poorni

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

4 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

5 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

6 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

6 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

7 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

7 hours ago

This website uses cookies.