50 வருடம் ஆனாலும் திமுகவை அசைக்க முடியாது என்று தமிழக வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் கொடியேற்றி, பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி நிகழ்வை கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் தி.மு.கவின் 100வது கொடியேற்றும் நிகழ்ச்சி திருச்சி கிழக்கு மாநகர திமுகவின் சார்பாக தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ்பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து 80 கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர்கள் மதிவாணன் மற்றும் மாமன்ற உறுப்பினர் லீலாவேலு, மாமன்ற உறுப்பினர்கள் கழகத்தினர் நிகழ்வில் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசியதாவது :- அன்பில் மகேஷ் பொய்யாமொழி இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். சிலர்கள் செயல்படுவார்கள், ஆனால் பேசத் தெரியாது. எல்லாம் ஒரு சேர அமைந்திருப்பவர் மகேஷ் பொய்யாமொழி.
தலைவர் எல்லா மாவட்டங்களிலும் 100 கொடிகள் ஏற்ற வேண்டும் அறிவித்தார். ஆனால் நாங்கள் பின்தங்கி தான் உள்ளோம். ஆனால் திருச்சியில் மகேஷ் பொய்யாமொழியோ அதை எட்டி விட்டார்.
நம் கட்சியை நினைக்கும் போது ஒரு பெருமை. உன் தலைவர் யார்? கலைஞர், கலைஞருக்கு பிறகு யார் தலைவர் தளபதி நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம். பிறகு உதயா. இந்த கட்சியை 50 வருடத்திற்கு யாராலும் அசைக்க முடியாது. இந்த இயக்கம் மக்களுக்கான இயக்கம், தமிழ் சமுதாயம் உணர்வோடு வாழ வேண்டும் என்றால் இந்த இயக்கம் இருந்தாக வேண்டும், என பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.