Categories: தமிழகம்

‘தங்களுக்கு சாதகமான நீதிபதியைக் கொண்டு நீட்டை கொண்டு வந்தது மத்திய அரசு’: அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்..!!

திருச்சி: திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திராவிடர் கழகம் சார்பில் திருச்சி மரக்கடையில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு பொதுக் கூட்டம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஆரோக்கியராஜ்சாமி தலைமையில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி அமைச்சர் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, வக்பு போர்டு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோர் மத்திய அரசின் நீட் தேர்வு புதிய கல்விக் கொள்கை மாநில உரிமை எதிரான செயல்களை கண்டித்து உரையாற்றினர்.

இதில் பேசிய அமைச்சர் கே என் நேரு நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீட் தேர்வை குறித்து வெளிப்படுத்தும் போது இரண்டு நீதிபதிகள் நீட் தேர்வுக்கு எதிராக தீர்ப்பளித்தனர் ஒரு நீதிபதி ஆதரவாக தீர்ப்பளித்தார்.

அந்த நீதிபதியை பாஜகவினர் எடுத்துக்கொண்டு அவர் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை ஏற்படுத்தி தங்களுக்கு சாதகமாக நீட் தேர்வை கொண்டு வந்தனர் என கூறினார்.

தொடர்ந்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எம்ஜிஆர் அவர்களால் நுழைவுத்தேர்வு வந்தபோது 25 ஆண்டுகாலம் திராவிட கழகம், கலைஞரும் எதிர்த்துப் போராடினோம். அதன் பின்னர் கலைஞர் தனியாக சட்டம் கொண்டு வந்தார். மாநிலத்தில் அந்த சட்டம் இன்றும் உள்ளது குடியரசுத் தலைவர் அதில் கையெழுத்திட்டுள்ளார். இந்தப் போராட்டம் ஆட்சிக்கு எதிராக நீங்கள் செய்யவில்லை மக்களுக்கு எதிராக செய்கிறீர்கள்.

அந்த மக்கள்தான் திமுகவை தேர்ந்தெடுத்தார்கள் நாம் தான் அவர்களை தேர்ந்தெடுத்தோம். இது சட்டமன்றத்திற்கு விரோதம், மக்களுடைய உரிமைக்கு விரோதம், ஜனநாயகத்துக்கு விரோதம், அரசியல் சட்டத்துக்கு விரோதம் இந்த போக்கை நிறுத்திக் கொள்ளாவிட்டால் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் போல யோசிக்க வேண்டிய நிலை வரும் என தெரிவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி திராவிடர் கழக பொதுச்செயலாளர் சந்திரசேகரன், தலைமைகழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வம், பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் குணசேகரன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.