Categories: தமிழகம்

யாரு STUNT அடிக்கறா? இது திமுக.. ஜல்லிக்கட்டு மாடு.. சும்மா இருக்காது : மேகதாது விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சருக்கு அமைச்சர் பதிலடி!!

வேலூர் : தமிழக முதல்வர் மேகதாது விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது அரசியல் நாடகம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூரில் திமுக சார்பில் பாசறை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா வேலு உள்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தமிழக முதல்வர் மேகதாது விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பது அரசியல் நாடகம் என கூறுவது கர்நாடக முதலமைச்சர் கூறியிருப்பது ஏற்புடையதல்ல. இப்படிப்பட்ட வார்த்தை வருத்தத்திற்குரியது.

காவிரியின் முழு விவரமே அவருக்கு தெரியவில்லை. காவிரி விவகாரத்தில் நாங்கள் தடைகல்லாக இருப்பதாக சொல்கிறார். ஆனால் தடைகல்லாக இருந்தது கர்நாடக அரசு தான் .

முதலில் 1926 ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிந்தது என கூறியது கர்நாடகம் . ஆணைய வேண்டுமென நாங்கள் கேட்டதை தடுத்தது கர்நாடகம் அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததும் தடைகல் போட்டதும் கர்நாடக அரசு தான்.

பிறகு நாங்கள் உச்சநீதிமன்றம் சென்று இறுதி தீர்ப்பு வாங்கினோம் அதனை ஏற்கமாட்டோம் என கூறியது கர்நாடக அரசு. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தலைவர் நியமிக்காமல் தடுத்ததும் கர்நாடக அரசு.

காவிரி வரலாற்றில் ஒவ்வொரு அங்குலமும் தடையாக இருந்தது. கர்நாடக முதலமைச்சர் கூறியிருப்பது தவறானது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய கடிதம் காவிரி குறித்து பிரதமருக்கு எழுதியதை மத்திய அரசு ஏற்காது என்று கூற இவர் யார்?

முதல்வர் அணைக்கட்ட கூடாது என சொல்வது சட்டத்திற்கு புறம்பானது என கூறுகிறார்கள் அது எப்படி சட்டபுறம்பாகும். ஒரு முதலமைச்சரே அதனை சட்டத்திற்கு புறம்பானது என்று கூறுகிறார்.

அவர் மாநில தண்ணீர் பங்களிப்பு 1772.5 அளவு தண்ணீர் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் அப்படி கிடைத்தால் தான் நமக்கு தண்ணீர் வரும் ஆனால் கர்நாடக முதல்வர் அவர்களின் தண்ணீர் என கூறுகிறார். ஆனால் உச்சநீதிமன்றம் கூறுவது கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழ் வரும் தண்ணீர் தமிழகத்திற்கு சொந்தம் என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது .

இந்த நகலை நான் கர்நாடக முதல்வருக்கு அனுப்பி வைக்கிறேன். எங்களின் தலைவரின் கடிதமே தவறு என்றும் அரசியல் நாடகம் என்றும் கூறுகிறார். கர்நாடக முதலமைச்சர் தான் அரசியல் நாடகத்தில் ஈடுபட்டுள்ளார் என துரைமுருகன் கூறினார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

12 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

12 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

13 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

14 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

14 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

15 hours ago

This website uses cookies.