கோவை: நாளை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம் என்றும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வர அனுமதி இல்லை எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை பொறுத்தவரை மாநகராட்சிக்கு 1 மையம், 7 நகராட்சிகளுக்கு 7 மையங்கள், 33 பேரூராட்சிகளுக்கு 9 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாநகராட்சியில் 100 வார்டு உறுப்பினர்கள் நகராட்சியில் 198 வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சியில் 504 வார்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. இதற்காக கோவை மாவட்டத்தில் 497 வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு மையத்திற்கும் 3 நுண் பார்வையாளர்கள் வீதம் 150 நுண் பார்வையாளர் பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் மாநகராட்சியில் 2400 காவலர்கள் நகராட்சி மற்றும் பேரூராட்சியை சேர்த்து 1460 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதைத்தவிர வாக்கு எண்ணிக்கை மையத்தில் சுற்றிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளருடன் 3 முகவர்கள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் செல்போன் எடுத்து வர அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் வர அனுமதி இல்லை.
மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு மதுக்கடைகள் செயல்படவும் அனுமதி இல்லை. கொரோனா அச்சம் உள்ள சூழலில், அலுவலர்கள் மற்றும் முகவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா குறித்து நேற்று முன்தினம் வரை 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.செய்தியாளர் சந்திப்பின் பொழுது கோவை மாவட்டத்திற்கு தேர்தல் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்ட நாகராஜன், மற்றும் பார்வையாளர் கோவிந்த ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.