Categories: தமிழகம்

என் மகள் மேலயே கை வைப்பியா? கேள்வி கேட்ட மாமியார் : மருமகன் செய்த வெறிச்செயல்.. மாதவரம் SHOCK!

என் மகள் மேலயே கை வைப்பியா? கேள்வி கேட்ட மாமியார் : மருமகன் செய்த வெறிச்செயல்.. மாதவரம் SHOCK!

திருவள்ளூர் மாதவரம் தபால் பெட்டி கண்ணன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 45 ) அவரது மனைவி ஜான்சி இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் .

ஜான்சியின் தாயார் வசந்தி (வயது 65) கணவரை இழந்தவர் இவர்களுடன் தங்கி ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.புஷ்பராஜிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த புஷ்பராஜ் மனைவியிடம் சண்டையிட்டு அடித்ததால் கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டார் .

பிள்ளைகளை கவனித்துக் கொண்ட மாமியார் வசந்தியை போதையில் இருந்த புஷ்பராஜ் வீண் தகராறில் ஈடுபட்டு ஆத்திரத்தில் புஷ்பராஜ் திடீரென தனது மாமியாரை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கீழே விழுந்த வசந்திக்கு பின் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்த நிலையில், மயக்கமாகி கீழே விழுந்துள்ளார். சில மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்த மகள் ஜான்சி தனது தாயாரின் தலையில் அடிபட்டு ரத்தம் வடிந்து மயக்கமாகி இருந்த நிலையை கண்டு அலறியபடி அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவரை உடனே ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: பழமை வாய்ந்த கண்ணகி கோவிலில் குவிந்த TN – KERALA மக்கள்.. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை!

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வசந்தி உயிரிழந்தார். இது பற்றிய தகவல் அறிந்த மாதவரம் போலீஸ்சார் தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று புஷ்பராஜை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலையும் அமைச்சர்கள் ; CM சிறை செல்வார்.. அனல் பறக்க விட்ட பாஜக பிரமுகர்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…

14 minutes ago

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

14 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

16 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

16 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

17 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

17 hours ago

This website uses cookies.