பழமை வாய்ந்த கண்ணகி கோவிலில் குவிந்த TN – KERALA மக்கள்.. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2024, 11:25 am
Kannaki
Quick Share

பழமை வாய்ந்த கண்ணகி கோவிலில் குவிந்த TN – KERALA மக்கள்.. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை!

தமிழக – கேரள எல்லையில் தேக்கடி பெரியார் புலிகள் சரணலாயத்தின் அருகே அமைபெற்றுள்ளது. மிகவும் பழமைவாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க மங்களாதேவி கண்ணகி கோவில் ஆண்டுதோறும் இங்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கமாகும்.

மேலும் படிக்க: கோடை விடுமுறை எப்போது? சிறப்பு வகுப்புகள் குறித்து SURPRISE வைத்த பள்ளிக்கல்வித்துறை!

அதன்படி இந்தாண்டும் மங்களாதேவி கோவிலில் பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இதற்காக இருமாநில அரசுகளும் அனுமதிகளையும் வழங்கியது.

இதனால் அதிகாலை 4- மணியளவில் கண்ணகி கோவிலுக்கு செல்ல அனுமதிகள் வழங்கப்பட்டது. வாகனங்களுக்கு பாஸ் போன்றவையும் வழங்கப்பட்டது.

மேலும் கடும் கட்டுப்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் வாகனங்களில் பாதுக்காப்பாக சென்று பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

மங்களதேவி கண்ணகி கோவிலில் காலை 4 மணி முதல் மதியம் 2.30 மணிவரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மங்களாதேவி கண்ணகி கோவில் சித்திரை பௌணர்மியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Views: - 75

0

0