Categories: தமிழகம்

2 மகள்களை கொன்று விட்டு தாய் குடும்பத்தோடு தற்கொலை… சிக்கியது உருக்கமான கடிதம் ; அதிர்ச்சியில் அஞ்சுகிராமம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன். இவரது மனைவி அனிட்டா (வயது 46). இவர்களுக்கு சகாய திவ்யா(19), சகாய பூஜா மெளலியா (16) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கணவர் ஏசுதாசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இரண்டு மகள்களையும் அனிட்டா வளர்த்து வந்தார்.

சகாய திவ்யா அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.இ. இரண்டாம் ஆண்டும், சகாய பூஜா மௌலியா அழகப்பபுரத்தில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று வழக்கம்போல் இரவு சாப்பிட்டுவிட்டு 3 பேரும் தூங்க சென்றனர். இன்று அதிகாலையில் அனிட்டா வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வந்துள்ளார். அப்போது, அனிதாவின் வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து மற்றொரு நபர் வந்தபோதும் கதவு பூட்டப்பட்டிருந்தது. வழக்கமாக காலையிலேயே அனிட்டாவின் வீட்டில் கதவு திறக்கப்படும். இன்று நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் அந்த பகுதியினிடையே சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, அனிட்டா மற்றும் அவரது 2 மகள்களும் தூக்கில் பிணமாக தொங்கினார்கள். 3 பேரும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்தனர்.

தூக்கில் பிணமாக தொங்கிய அனிட்டா, சகாய திவ்யா, சகாய பூஜா மெளலியா ஆகிய 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 மகள்களையும் தூக்கில் தொங்கவிட்டு கொன்று, அனிட்டா தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. அது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் அனிட்டா எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், குழந்தைகளை சரிவர கவனிக்க முடியவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்வதாகவும், எங்கள் சாவுக்கு வேறுயாரும் காரணமில்லை என்றும் எழுதியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 3 பேர் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அனிதா கணவன் இறந்த பிறகு மகள்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளார். பணப்பிரச்சனை அவருக்கு இருந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்து வருகிறது.

மகள்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அஞ்சுகிராமம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

12 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

12 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

13 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

13 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

13 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

14 hours ago

This website uses cookies.