ஆண்கள் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து குடும்பத்தைக் கரையேற்றி வந்த காலகட்டத்தை கடந்து தற்போது பெண்களும் ஆட்டோ ஓட்டும் பணியில் இறங்கியுள்ளனர். காலத்தின் கட்டாயத்தில் ஓட்டுநர் வேலைக்கு பெண்கள் வந்தாலும், அதிலும் சாதித்துக் காட்டியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த பாக்கியலட்சுமி
கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி குடும்ப சூழல் காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னமே ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு வந்தவர். வறுமையிலும் கல்வி அவசியம் என்பதை உணர்ந்த பாக்கியலட்சுமி தனது மகள்கள் இருவரையும் பட்டதாரிகளாக மாற்றியுள்ளார்.
அன்னையின் விடா முயற்சியையும், மகள்களை கரைசேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் பார்த்த இவரது மகள்கள் படிப்பை கெட்டியாகப் பிடித்து கரையேறியுள்ளனர். இதில் ஒருவர் லண்டனுக்கு சென்று படித்தும் முடித்துள்ளார். அன்பான இந்த அன்னைக்குப் பல ஆண்டுகள் கழித்து ஒரு அங்கீகாரம் வழங்கியுள்ளது கோவை அரசு கலைக்கல்லூரி.
மகளிர் தினத்தன்று இந்த கல்லூரியில் நடைபெற்ற விழாவில், பாக்கியலட்சுமியின் விடா முயற்சியைப் பாராட்டி கோவை கொற்றவை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாக்கியலட்சுமி தனது மகள்களை கரையேற்ற உழைத்தது குறித்தும் காணொலி ஒளிபரப்பப்பட்டது காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது.
25 ஆண்டுகளுக்கு முன் ஆட்டோ ஓட்டுநராக வந்தபோது தன்னை அறுவறுப்பாகப் பார்த்த சமூகம், தற்போது விருது வழங்கி கவுரவிப்பதை எண்ணி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கிறார் பாக்கியலட்சுமி
தாய்க்கு மிஞ்சிய சக்தி உலகில் இல்லை என்று வசனங்கள் வெறும் வசனங்களாக இருப்பதில்லை என்பதை பாக்கியலட்சுமி போன்ற அன்புத்தாய்மார்கள் அனுதினமும் உணர்த்தி வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.