இருசக்கர வாகனத்தின் மீது கேஸ் டேங்கர்லாரி மோதி விபத்துக்குள்ளான நிலையில் தலைக்கவசம் அணிந்த வாகன ஓட்டி சம்பவ இடத்திலே உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
கோவையில் இருந்து திருப்பூருக்கு நாகராஜ் என்பவர் இரு சக்கர வாகனத்தில் தனது நண்பர் பாலசுப்பிரமணியம் என்பவருடன் சென்று கொண்டிருந்தார்.
பல்லடம் அருகே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் நகராட்சி அலுவலகம் அருகே வந்த போது கொச்சியில் இருந்து தஞ்சாவூர் சென்று கொண்டிருந்த டேஙகர் லாரியின் இடது புறம் சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த நிலையிலும் லாரியின் சக்கரத்தில் சிக்கிய நாகராஜ் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த அவரது நண்பர் பாலசுப்பிரமணியம் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் டேங்கர் ஓட்டுனர் செந்தில் ராஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்னிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.