கோவை: பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கஸ்தூரிபாளையம் சாலையில் இருபுறமும் உள்ள பள்ளத்தால் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பால பணிகள் மந்த கதியில் நடைபெறுகிறது. திட்டமிடப்படாத மாற்றுச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலை முழுவதுமாக அடைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மாற்றுச்சாலைகளில் மக்கள் பயனித்து வருகின்றனர்.
இதில் முக்கிய மாற்றுச்சாலையாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து கஸ்தூரி பாளையம் சாலை வழியாக வீரபாண்டி பிரிவு செல்லும் சாலை உள்ளது. இதில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கஸ்தூரி பாளையம் செல்லும் வழியில் உள்ள குறுகிய சாலையில் இருபுறமும் பள்ளம் உள்ளது.
இதனால் இரண்டு வாகனங்கள் எதிர் எதிர் வரும் போது பள்ளம் உள்ளது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் என்னில் அடங்கா துயரங்களை சந்தித்து வருகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகளை வேகமாக முடிக்க வேண்டும். மாற்றுச்சாலைகளை மேம்படுத்த வேண்டும். குறுகிய சாலையில் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்புகள் வைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.