அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாச்சே.. புலம்பும் பெண் அரசியல்வாதி : அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.!!!
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டி வருகின்றன. இதனால் தேர்தல் களம் பயங்கர எதிர்பார்ப்பில் உள்ளது.
ஆனால் பெண் அரசியல்வாதியான விஜயதாரணி சோகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணிக்கு பாஜகவிலும் சீட் மறுக்கப்பட்டுள்ளது.
விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக மூன்று முறை பதவி வகித்து வந்த விஜயதரணி, காங்கிரஸ் கட்சியின் மீதான அதிருப்தி காரணமாக சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி டெல்லியில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருந்தார்.
காங்கிரஸில் சீட் பிரச்சனை காரணமாக பாஜகவில் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கும், விளவங்கோடு தொகுதிக்குமான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது . அதில், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், எல் முருகன், தமிழிசை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.
இதுபோன்று, விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிட நந்தினி என்பவரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முதலில் கன்னியாகுமரி தொகுதியில் விஜயதரணி பெயர் அறிவிப்பில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொன் ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
கன்னியாகுமரி தொகுதியை விஜயதரணி கேட்டு வந்ததாக தகவல் வெளியான நிலையில் இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்களிடைய அதிருப்தியை ஏற்படுத்தியது.
சரி விளவங்கோடு வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் நந்தினி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் விஜயதரணி ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.