கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் நான்கு ரயில் பயணிகளை கத்தியால் வெட்டிவிட்டு, அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன், பணம் மற்றும் உடமைகளை பறித்துச் சென்ற மூன்று பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்ல கூடிய புறநகர் ரயிலானது, வழக்கம் போல் பத்து நாற்பத்தைந்து மணிக்கு புறப்படும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக நேற்று இரவு ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பிய ரயில் கவரப்பேட்டை ரயில் நிலையத்திற்கு சுமார் 12.30 மணியளவில் சென்றுள்ளது.
அப்போது ரயிலின் நான்காவது பெட்டியில் ஏறிய சுமார் 25 வயது மதிக்கத்தக்க மூன்று பேர் கொண்ட கும்பல் ரயிலில் பயணித்த மீஞ்சூரில் உள்ள மருந்தகத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிய சுண்ணாம்புகுளத்தைச் சேர்ந்த மௌலி (24), சரத் (26) மற்றும் கும்மிடிப்பூண்டி உத்ராபதி (27), இலயராகவன் (22) ஆகிய நான்கு பேரிடம் விலை உயர்ந்த செல்போன், ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் உடமைகளை கத்தியைக் காட்டி மிரட்டி பறித்துள்ளனர்.
மேலும் 4 பேரையும் அறிவாளால் வெட்டிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. ரயிலில் கும்மிடிப்பூண்டி வந்தடைந்த பாதிக்கப்பட்ட நான்கு நபர்களையும் ரயில்வே போலீசார் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
தொடர்ந்து கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையம் அழைத்துச் சென்ற நான்கு பேரிடமும் ரயிலில் வழிப்பறி செய்யும் கும்பலின் புகைப்படங்களை காட்டி விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்து ரயில்வே போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று ரயில் நிலையங்களிலும் இரவு நேர ரயில்களில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ரயில் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.