முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட புதிய வரவான தருமபுரியில் தாயை பிரிந்த 4 மாத குட்டி யானை மீண்டும் பொம்மனிடம் பராமரிக்க ஒப்படைத்தனர்.
கடந்த ஏழாம் தேதி தர்மபுரி மாவட்டம் பென்னகரம் பகுதியில் வழி தவறி வந்து கிணற்றில் விழுந்த நான்கு மாத ஆண் குட்டி யானையை வனத்துறையினர் தீயணைப்பு துறை உதவியுடன் மீட்டனர். பின்பு, தர்மபுரி ஒகேனக்கல், ஒட்டப்பட்டி காட்டுப்பகுதியில், அதனை பராமரித்து உணவுகள் வழங்கி பாதுகாத்தனர்.
இந்நிலையில், இந்த குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் பராமரிப்பு முகாமிற்கு டெம்போ வாகன மூலம் கொண்டுவரப்பட்டது. இந்த குட்டி யானையுடன் இதுவரை அதனை பாராமரித்து வந்த வன ஊழியர் மகேந்திரன் மற்றும் மற்றும் மருத்துவ குழுவினர் வனத்துறையினர் முதுமலைக்கு வந்தனர்.
5 நாட்கள் பராமரித்த வனஊழியர் மகேந்திரன் அதனை விட்டு பிரிவதை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்பு முதுமலையில் ஏற்கனவே ரகு, பொம்மி என்ற இரு யானைகளை பராமரித்த ஆவணப்படத்தால், ஆஸ்கர் வாங்கிய சென்ற பொம்மன் – பெள்ளி அம்மாளிடம் குட்டி யானையை முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ், இணை களஇயக்குனர் மற்றும் வனத்துறையினர் ஒப்படைத்தனர். பின்பு குட்டி யானைக்கு மருத்துவகுழுவினர் பறிசோதனை செய்து சத்து உணவுகள் வழங்கினர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.