முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட புதிய வரவான தருமபுரியில் தாயை பிரிந்த 4 மாத குட்டி யானை மீண்டும் பொம்மனிடம் பராமரிக்க ஒப்படைத்தனர்.
கடந்த ஏழாம் தேதி தர்மபுரி மாவட்டம் பென்னகரம் பகுதியில் வழி தவறி வந்து கிணற்றில் விழுந்த நான்கு மாத ஆண் குட்டி யானையை வனத்துறையினர் தீயணைப்பு துறை உதவியுடன் மீட்டனர். பின்பு, தர்மபுரி ஒகேனக்கல், ஒட்டப்பட்டி காட்டுப்பகுதியில், அதனை பராமரித்து உணவுகள் வழங்கி பாதுகாத்தனர்.
இந்நிலையில், இந்த குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் பராமரிப்பு முகாமிற்கு டெம்போ வாகன மூலம் கொண்டுவரப்பட்டது. இந்த குட்டி யானையுடன் இதுவரை அதனை பாராமரித்து வந்த வன ஊழியர் மகேந்திரன் மற்றும் மற்றும் மருத்துவ குழுவினர் வனத்துறையினர் முதுமலைக்கு வந்தனர்.
5 நாட்கள் பராமரித்த வனஊழியர் மகேந்திரன் அதனை விட்டு பிரிவதை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்பு முதுமலையில் ஏற்கனவே ரகு, பொம்மி என்ற இரு யானைகளை பராமரித்த ஆவணப்படத்தால், ஆஸ்கர் வாங்கிய சென்ற பொம்மன் – பெள்ளி அம்மாளிடம் குட்டி யானையை முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ், இணை களஇயக்குனர் மற்றும் வனத்துறையினர் ஒப்படைத்தனர். பின்பு குட்டி யானைக்கு மருத்துவகுழுவினர் பறிசோதனை செய்து சத்து உணவுகள் வழங்கினர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.