Categories: தமிழகம்

சத்தியமங்கலம் அருகே மர்மமான முறையில் பெண் யானை உயிரிழப்பு : வனத்துறையினர் விசாரணை!!

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மர்மமான முறையில் பெண் யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் சரகத்திற்கு உட்பட்ட காராட்சிகொரை வனப்பகுதியில் யானை ஒன்று வாயில் இரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பவானிசாகர் வனத்துறையினருக்கு கிடைத்த தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் ஆய்வு செய்த போது பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த யானையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் வன கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வன கால்நடை மருத்துவர் வந்த பின்னர் இறந்த யானையின் உடலை உடற்கூறாய்வு செய்த பின்னரே யானையின் இறப்புக்கு உண்டான காரணம் தெரியவரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் மர்மமான முறையில் யானைகள் இறப்பது தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

5 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

21 minutes ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

29 minutes ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

1 hour ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

1 hour ago

ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!

ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…

2 hours ago

This website uses cookies.