ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மர்மமான முறையில் பெண் யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் சரகத்திற்கு உட்பட்ட காராட்சிகொரை வனப்பகுதியில் யானை ஒன்று வாயில் இரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பவானிசாகர் வனத்துறையினருக்கு கிடைத்த தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் ஆய்வு செய்த போது பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த யானையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் வன கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வன கால்நடை மருத்துவர் வந்த பின்னர் இறந்த யானையின் உடலை உடற்கூறாய்வு செய்த பின்னரே யானையின் இறப்புக்கு உண்டான காரணம் தெரியவரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் மர்மமான முறையில் யானைகள் இறப்பது தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.