Categories: தமிழகம்

கோவில் காவலாளியை தாக்கிய மர்ம கும்பல்…! சிசிடிவி காட்சி வெளியீடு…!! குற்றவாளிகளுக்கு போலீசார் வலை…

புதுச்சேரி : புதுச்சேரியில் கோவில் காவலாளியை நள்ளிரவில் மர்ம நபர்கள் கத்தி மற்றும் கற்களால் தாக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியீட்டு போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (53). புதுச்சேரி நகர பகுதியான காந்தி வீதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 22 ஆம் தேதி இரவு இவர் உறங்கி கொண்டிருந்த போது மூன்று மர்ம நபர்கள் தன்னை கத்தி மற்றும் கற்களால் தாக்கி விட்டு சென்றதாக ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.

இதில் முதலில் ஒருவர் கையில் கத்தி உடன் வந்து சுப்ரமணியை தாக்குவதும்,அதில் பயந்து அவர் ஒட முயலும்போது மற்றொருவர் கற்களை எடுத்து தாக்குவதும், அப்போது மூன்றாவது நபர் இருசக்கர வாகனத்தை எடுத்து வந்து இருவரையும் ஏற்றி செல்வது பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து காவலாளி தாக்கபட்ட சிசிடிவி காட்சிகளை போலிசார் வெளியீட்டு மூன்று மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் தாக்கபட்ட கோவில் காவலாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை தாக்கியவர்கள் ஏதேனும் முன்பகை காரணமாகவா அல்லது குடிபோதையில் தாக்கினார்களா என்பது குறித்து அவர்களை பிடித்த பிறகே தெரியவரும் என காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

KavinKumar

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

10 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

11 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

11 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

13 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

13 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

14 hours ago

This website uses cookies.