தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே நாடார் மக்கள் இயக்கம், தமிழர் கழகம் மாநில பொது செயலாளர் சரவணகுமார் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள ராணி மகாராஜபுரம் சேர்ந்தவர்
சரவணகுமார். இவர் தமிழர் கழகம் மற்றும் நாடார் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளராக இருந்து வந்தார்.
இவர் மீது கொலை முயற்சி உட்பட 15க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனை அடுத்து இன்று காலை அம்மன்புரம் அருகில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தவரை அங்கு வந்த மூன்று நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரவணகுமார் உயிரிழந்தார்.
இது குறித்து குரும்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் சரவணகுமாரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.