தூத்துக்குடி அருகே நாடார் மக்கள் இயக்க மாநில பொதுசெயலாளர் வெட்டிப்படுகொலை : தேநீர் அருந்த கடைக்கு சென்ற போது மர்மநபர்கள் வெறிச்செயல்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2022, 7:44 pm
Thoothukkudi Murder - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே நாடார் மக்கள் இயக்கம், தமிழர் கழகம் மாநில பொது செயலாளர் சரவணகுமார் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள ராணி மகாராஜபுரம் சேர்ந்தவர்
சரவணகுமார். இவர் தமிழர் கழகம் மற்றும் நாடார் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளராக இருந்து வந்தார்.

இவர் மீது கொலை முயற்சி உட்பட 15க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனை அடுத்து இன்று காலை அம்மன்புரம் அருகில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தவரை அங்கு வந்த மூன்று நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரவணகுமார் உயிரிழந்தார்.

இது குறித்து குரும்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் சரவணகுமாரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 628

0

0