புதுச்சேரி : நீட் விவகாரத்தில் புதுச்சேரி அரசின் நிலைப்பாடு என்ன என்பதை முதல்வர் ரங்கசாமி விளக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நாராயணசாமி வெளியிட்டுள்ள விடியோவில் கூறியிருப்பதாவது;-எந்த மாநில அரசின் மசோதாவையையும் திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும், விளக்கம் கேட்கலாம், ஆனால் தமிழக ஆளுநர் செய்தது அதிகார மீறிய செயல் என்றும், ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என குற்றச்சாட்டிய அவர், நீட் விவகாரத்தில் தமிழகத்தில் சட்டமன்றத்தை கூட்டி முக்கிய முடிவு எடுக்கவுள்ளார்கள், இந்நிலையில் நீட் விவகாரத்தில் புதுச்சேரி மாநிலத்தின் நிலை என்னெ என்பதை முதல்வர் ரங்கசாமி விளக்க வேண்டும். மேலும் நீட்டை ஆதரிக்கின்றாரா…? மருத்துவ மாணவர்களுக்கு துரோகம் விளைவிக்கின்றாரா என்பதை மாநில மக்களுக்கு விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் மக்களை வஞ்சித்து வரும் வேலையில், கட்டவுட் கலாச்சாரத்தை ஆரம்பித்துள்ளார் என்றும், புதுச்சேரி அரசு பேனர் வைக்கும் அரசாக மாறியுள்ளதாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆளுநர் கிரண்பேடி, மத்திய பாஜக அரசின் எதிர்ப்பையும் மீறி கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுக்கு வாரியப்பதவி வழங்கினோம், ஆனால் முதல்வர் ரங்கசாமிக்கு தற்போது எந்த தடையும் இல்லாத நிலையில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுக்கு ஏன் வாரியபதவிகளை வழங்கவில்லை என நாராயணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
This website uses cookies.