கோவை: கோவை துடியலூர் புது முத்துநகர் அருகே உள்ள நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஊசி பாசி பின்னியபடி வந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் இந்த பகுதியில் 65 குடும்பங்கள் 40 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து தருகிறோம். இங்கு மின் இணைப்பு கேட்டு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசிடம் முறையிட்டு வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு மின் இணைப்பு தர வில்லை.
மேலும் அ.தி.மு க.வைச் சேர்ந்த ஒரு பிரமுகர் எங்கள் பகுதிக்கு மின் இணைப்பு தரக்கூடாது என்று துடியலூர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். மின் இணைப்பு பெற தடையின்மை சான்றிதழ் கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டு கடந்த ஆண்டு விண்ணப்பித்தோம்.
ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. மின்விளக்கு வசதி இல்லாததால் எங்கள் பகுதி மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டது.
ஆனால் இதுவரை இணைப்பு வழங்கப்படவில்லை. எனவே நரிக்குறவர் இன மக்களை வஞ்சிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதிக்கு மின் இணைப்பு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.