Categories: தமிழகம்

தேசிய குடற்புழு நீக்க வாரம்…கோவையில் 4.47 லட்சம் குழந்தைகள் தகுதியானவர்கள்: பயன்பெற மாநகராட்சி ஆணையர் அழைப்பு..!!

கோவை: கோவையில் குடற்புழு நீக்க மருந்து பெற 4.47 லட்சம் குழந்தைகள் தகுதியானவர்கள் என மாநகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் தேசிய குடற்புழு நீக்க வாரம் 4ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 1 முதல் 19 வரை வயதுடைய அனைத்து குழந்தைகள் மற்றும் 20 வயது முதல் 30 வயதுடைய பெண்கள் தவறாமல் குடற்புழு நீக்க முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது, நாடு தழுவிய குடற்புழு நீக்க வாரம் வரும் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை அனைத்து நகர்நல மையம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறுகின்றது. விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வரும் 21ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.

1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ½ மாத்திரை அல்பெண்டசோல் 200 மில்லி கிராம் (பொடியாக) கொடுக்க வேண்டும். 2 வயதிற்கு மேல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மாத்திரை அல்பெண்டசோல் 400 மில்லி கிராம் வழங்கப்பட வேண்டும். 20 முதல் 30 வயதுடைய பெண்கள் அனைவருக்கும் அல்பெண்டசோல் மாத்திரை கொடுக்கலாம்.

கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொடுக்கக்கூடாது. குடற்புழு நீக்க மருந்து பெற தகுதியான குழந்தைகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 446 ஆகும். இதில் ஆண் சிறார்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்து 898 ஆகும். பெண் சிறார்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 548 ஆகும்.

1 வயது முதல் 2 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 482 ஆகும். 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பயன்பெறவுள்ள பெண்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 626 என தெரிவித்துள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

3 weeks ago

This website uses cookies.